போதை பொருள் தடுப்பு உறுதிமொழி - மாவட்டக் கல்வி அலுவலர், செய்யாறு
தமிழக அரசின் ஆணையின்படி, செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11.08.2023 அன்று காலை 11 மணி அளவில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி குறித்து செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. உமாமகேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர் எஸ். இராஜேஸ்வரி மற்றும் முதுகலை ஆசிரியர் திருமதி. கே. சுமதி ஆகியோர் போதை தடுப்பு உறுதிமொழியினை கூற 2038 மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.












Comments
Post a Comment